2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கஜேந்திரனின் வீடும் முற்றுகை

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனின் திருநெல்வெலியில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

அவரது வீட்டிற்கு அருகாமையிலுள்ள சனசமூக நிலையத்தின் திறப்பினை சனசமூக நிலையத் தலைவரிடமிருந்து வாங்கிய இராணுவத்தினர் அங்கு தாங்கள் 2 நாட்களுக்குத் தங்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் அதனை தடுக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் நேற்று சனிக்கிழமை முதல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X