2025 ஜூன் 30, திங்கட்கிழமை

துண்டுப்பிரசுர விவகாரம் : இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூரும் துண்டுப்பிரசுரங்களை வைத்திருந்த இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் துண்டுப்பிரசுரங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த மயில்வாகனம்பிள்ளை பத்ம தயாளன் (57) என்பவர் கடந்த வியாழக்கிழமை (15) இரவு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அந்தத் துண்டுப்பிரசுரங்களுடன் தொடர்புடையவரென சுன்னாகம் புகையிரத வீதியினைச் சேர்;ந்த 30 வயதுடைய ஒருவரும் நேற்று வெள்ளிக்கிழமை (16) கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து இருவரையும் மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X