2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முதியோர் இல்லக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா

Kanagaraj   / 2014 மே 18 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

தொல்புரத்தில் அமைந்துள்ள சிவபூமி இல்லத்தில் முதியவர்களைத் தங்க வைப்பதற்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதி நேற்று சனிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

உயர் கல்விக்காக பிரித்தானியா செல்லவிருந்த நிலையில் மரணமடைந்த வைத்திய நிபுணர் செல்வி யமுனா மார்க்கண்டு ஞாபகார்த்தமாக இந்தக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தர்மகர்த்தா சபைத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனாவின் பெற்றோர்களான திரு.திருமதி மார்க்கண்டு ஆகியோரினால் இந்தக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான், கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் பொ.பாலசிங்கம், மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, வலி மேற்கு (சங்கானை) பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், வடமாகாண கல்வித் திணைக்கள முன்னாள் கல்விப் பணிப்பாளர் எஸ்.விக்கினேஸ்வரன், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு எஸ்.அகிலேஸ்வரக்குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X