2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிறவுண் வீதியிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். பிறவுண் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து  535,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திங்கட்கிழமை (19)  திருட்டுப்போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீட்டிலுள்ளவர்கள்  காரைநகரிலுள்ள கோவிலொன்றுக்கு  சென்றபோது வீட்டுக் கதவை  உடைத்துக்கொண்டு  உள்நுழைந்த திருடர்கள் பணம், தங்கநகைகள், இலத்திரனியல் பொருட்கள், சைக்கிள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X