2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன், கி.பகவான்


யாழ்.சாவகச்சேரி டச்சு வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது வீதியோரத்திலிருந்த வேப்பமரத்தின் கொப்பு முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயமடைந்து புதன்கிழமை (21) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டுவிலினைச் சேர்ந்த சிவகுரு யோகேஸ்வரன் (42) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தார்.

இதில் முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X