2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆடிப்பிறப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


ஆடிப்பிறப்பு தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா புதன்கிழமை (21) தெரிவித்தார்.

வடமாகாண கலைஞர்களுடனான கலாசாரப் பேரவைக் கலந்துரையாடல் வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில்  புதன்கிழமை (21) காலை இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'நமது கலைகளை பேணிப் பாதுகாத்து எதிர்காலத்திலே தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கு எவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடவே இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடல் மூலம் எட்டப்படும் முடிவுகளின் ஊடாக எம்மக்களை தெளிவுபடுத்தி பிற்காலத்திலும் எமது கலைகளை பேணிப்பாதுகாக்க வேண்டும்.

அதன் ஒரு கட்டடமாக, ஆடிப்பிறப்பென்றால் என்ன? அதற்கு என்ன செய்யலாம்? அதனுடைய வரலாற்று பின்னணி என்ன? சமய பின்னணி என்ன? கலை கலாசார பின்னணி என்ன? பண்பாட்டு விழுமிய பின்னணி என்ன? என்பவை பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இந்த ஆடிப்பிறப்பை நாங்கள் ஏன் கொண்டாடுகிறோம் இந்த ஆடிப்பிறப்பின் போது இந்த ஆடிக் கூழை நாங்கள் ஏன் காய்ச்சி உண்ணுகின்றோம் என்பதை எங்களுடைய குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும். இவற்றுக்கான சிறிய வேலைத்திட்டத்தை செய்ய எண்ணியிருக்கின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X