2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிரேனைட் வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Suganthini Ratnam   / 2014 மே 23 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -கி.பகவான் 

யாழ். எழுதுமட்டுவாள் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறை புகைக்கூட்டிலிருந்த கிரேனைட்  வெடித்ததால் படுகாயமடைந்த அதேயிடத்தைச் சேர்ந்த சந்திரகுமார் பிரதீபன் (வயது 22) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை   யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்  புகைக்கூட்டை துப்பரவு செய்துகொண்டிருந்தபோது, இக் கிரேனைட் குண்டு வெடித்தது. இதில் படுகாயமடைந்த இவர் உடனடியாக கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த மேற்படி பகுதியில் பொதுமக்கள் மீள்குடியேறுவதற்கு 2012ஆம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X