2025 ஜூன் 30, திங்கட்கிழமை

திறந்த அறையிலிருந்த தையல் இயந்திரங்கள் திருட்டு

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வட்டுக்கோட்டை செம்பாட்டான் தோட்டம் அம்பாள் சனசமூக நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு தையல் இயந்திரங்கள் சனிக்கிழமை (24) இரவு திருடப்பட்டுள்ளதாக சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பற்ற (பூட்டு இல்லாத) சனசமூக நிலைய அறையில் வைக்கப்பட்ட மேற்படி தையல் இயந்திரங்களே திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான    விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார்   மேலும் தெரிவித்தனர்.

மேற்படி தையல் இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாக சனசமூக நிலைய நிர்வாகத்தினருக்கு தாம் எடுத்துக்கூறியும் அவர்கள் அதனைச் செவிமடுக்கவில்லையென ஊர்மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X