2025 ஜூன் 30, திங்கட்கிழமை

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலைகள்'

Menaka Mookandi   / 2014 மே 26 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலை' என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக்கொண்டனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போது, மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது, முருகேசு சந்திரகுமாரினால் தறுதலை ஆசிரியர்கள் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டது.

அதன்போது, தறுதலை ஆசிரியர் என்று நீங்கள் யாரைக் கூறுகின்றீர்கள் என கஜதீபன் கேட்க, 'உம்மைத் தான் தறுதலை ஆசிரியர் என்று கூறினேன்' என்று சந்திரகுமார் கூறினார்.

அதற்கு பதிலளித்த கஜதீபன் 'நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் ஒரு தறுதலை அரசியல்வாதி' எனக் கூறினார். அதற்கு சந்திரகுமார் 'ஆமாம் நான் தறுதலை அரசியல்வாதி தான்' எனக் கூறிமுடித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • நல்லவன் Monday, 26 May 2014 12:07 PM

    இப்படிப்பட்ட 'தறுதலை' ஆசிரியர், அரசியல்வாதிகளை பின்பற்றுவோர் 'தறுதலை' ஆகாமல் இருந்தால் சரிதான்!

    Reply : 0       0

    Theivaseelan Tuesday, 27 May 2014 09:50 AM

    முதலமைச்சா் தனது சகாக்களைப் பற்றித் தொிந்து கொள்வாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X