2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அதிபர் இடத்தில் ஆசிரியர்கள் - ஆசிரியராக அதிபர்கள்

Super User   / 2014 மே 26 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வடமாகாணத்தில் அதிபர்களாக இருக்கவேண்டிய தகுதியுடைய பலர் ஆசிரியராகவும், அதிபர் தகுதியற்ற ஆசிரியர்கள் சிலர் அதிபர்களாகவும் கடமையாற்றுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கஷ;ரப் பிரதேசத்தில் கடமையாற்றுவதற்கு பின் நிற்பதினால் கஷ;ரப் பிரதேசத்திலுள்ள ஆசிரியர்களை அதிபராக்கியுள்ளதாகவும், மற்றய இடங்களில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் இல்லாமையினால் அதிபர் தரத்திலுள்ள சிலர் ஆசிரியர்களாகவும் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (27) தொடர்ந்து நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி இணைத்தலைவர்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X