2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முதலில் குழாய்களை பொருத்துவோம்: சிவாஜிலிங்கம்

Kanagaraj   / 2014 மே 27 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான குழாய்களைப் இணைத்து வைப்போம், எப்போது இரணைமடுவில் 35 அடிக்கு மேல் நீர் தேங்குகின்றதோ அப்போது யாழ்ப்பாணத்திற்கு குடிநீரைப் பெற்றுக்கொள்ளவோம் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இதன்போது இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர்த் திட்டம் பற்றி கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி திட்டத்திற்காக வழங்கப்பட்ட நிதி வீணாகத் திருப்பி செல்லாதிருக்க குழாய்களை பொருத்தி வைப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X