2025 ஜூன் 30, திங்கட்கிழமை

புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஆளுநர் விஐயம்

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}



-செல்வநாயகம் கபிலன்


யாழ். தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியாசாலைக்கு வியாழக்கிழமை (29) வடமாகாண ஆளுநர் ஐ.ஏ.சந்திரசிறி விஐயம் செய்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

இதன்போது, 650 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடம் தொடர்பாகவும், துறைசார்ந்த அதிகாரிகளுடனாக கலந்துரையாடியதுடன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியாலைக்கு மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் இந்திக்க குமாரவிடம் கேட்டறிந்துகொண்டார்.

தொடர்ந்து வடமாகான ஆளுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியிருந்தார்.

இதன்போது, ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X