2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பாடசாலை அதிபர் மீது முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
 

ஆவரங்கால் பகுதியிலுள்ள பாடசாலை அதிபருக்கு எதிராக மாணவன் ஒருவரின் தந்தை அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (10) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகப் அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதிபர் தனது மகனுக்கு திருடன் பட்டம் சூட்டி 8 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தி மகனை உளவியல் ரீதியில் பாதிப்படையச் செய்துள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,

மேற்படி பாடசாலையில் இருந்த நீர்க்குழாய் ஒன்று கடந்த சனிக்கிழமை (07) திருட்டுப்போயிருந்தது.

இந்நிலையில் குறித்த நீர்க்குழாயினைத் திருடியதாக மேற்படி மாணவன மீது சந்தேகம் கொண்ட அதிபர், குறித்த மாணவனை திங்கட்கிழமை (09) பாடசாலை நேரம் முழுவதும், அதிபர் அறையில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதனால் தனது மகன் உளரீதியில் பாதிப்படைந்துள்ளதுடன், அவனது சக மாணவர்கள் அவனைத் திருடன், திருடன் என கிண்டல் செய்வதால் தனது மகன் பாடசாலைக்கு செல்வதற்கு மறுத்து வருவதாகக் கூறியே தந்தையினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X