2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வலம்புரிச் சங்கு விற்பனை செய்தவர்களுக்கு பிணை

Kogilavani   / 2014 ஜூன் 10 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மானிப்பாய் பகுதியில் 52 இலட்சம் பெறுமதியுடைய வலம்புரிச் சங்கினை விற்பனை செய்ய முயன்ற மூவரையும் தலா 2 இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, குறித்த வழக்கினை ஜுலை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

விசேட அதிரடிப் படையினரால் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டு, மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மேற்படி நபர்களை பொலிஸார்  செவ்வாய்க்கிழமை (10) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் பொலிஸாரிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினர் வலம்புரிச் சங்கு வைத்திருந்த ஒருவரை மானிப்பாயிலுள்ள வங்கியின் முன்னால் வைத்துக் கைதுசெய்தனர்.

அவரிடமிருந்து 52 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்கும் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அப்பகுதியில் நின்றிருந்த மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

நவாலி, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டையினைச் சேர்ந்த மேற்படி நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து மூவரும் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பொலிஸார் குறித்த நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில், 'குறித்த வலம்புரிச் சங்கினை 52 இலட்சத்திற்கு தங்களிடமிருந்து வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் தங்களை மானிப்பாயிலுள்ள வங்கியொன்றிற்கு வரும்படியும் வங்கியிலிருந்து பணத்தினை எடுத்துக் தங்களிடம் கொடுத்துவிட்டு சங்கினைப் பெற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததாகவும், அதற்கமைய தாங்கள் அங்கு வந்த பொழுது, விசேட அதிரடிப் படையினர் தங்களைக் கைது செய்ததாக' குறித்த நபர்கள் தெரிவித்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஷ; தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X