2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கவுணாவத்தை வேள்விக்கு சட்டக்கட்டுப்பாடுகள் விதிப்பு

Kogilavani   / 2014 ஜூன் 11 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.நேசமணி, நா.நவரத்தினராசா

யாழ்.கீரிமலை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (14) மேற்கொள்ளப்படவிருந்த வேள்விக்கு சட்டக்கட்டுப்பாடுகள் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் மகிழ் மகாதேவா புதன்கிழமை (11) தீர்ப்பளித்தார்.

மத நம்பிக்கைகள் மற்றும் ஜீவகாருண்ய அடிப்படையில் மனிதநேயமுள்ள ஒருவர் மேற்படி வேள்வியினைத் தடைசெய்யும்படி தொடுத்த வழக்கின் விசாரணை கடந்த திங்கட்கிழமை (09) முதல் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வேள்வியினை நடத்த வேண்டுமானால் விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு – 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஒரு விலங்கு வெட்டப்படும் போது மற்றய விலங்கு பார்க்காத வகையிலும், விலங்குகள் வெட்டப்படும் இடத்தில் ஒருதுளி இரத்தம் சிந்தாத வகையிலும், இறைச்சிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு விலங்கிற்கும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதி பெற்றப்பட்டும் வெட்டப்படவேண்டும் என சட்டக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

அத்துடன், விலங்கு வதைக்கு எதிரான சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு சரத்தும் மீறாத வகையில் நடக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேலும், வேள்வி இடம்பெறும் வேளையில் மேற்கூறப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பாக இளவாலைப் பொலிஸாரை கண்காணிப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் அதில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் கவுணாவத்தை, பிரான்பற்று போன்ற ஆலயங்களிலும் ஏனைய சில கிராமப்புறங்களிலுள்ள ஆலயங்களிலும் வேள்வி என்ற பெயரில் வருடாந்தம் நூற்றுக்கணக்கான கிடாய் ஆடுகளும் சேவல்களும் பலியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X