2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாணவியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 12 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்சுவேலி இடைக்காடுப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து மாணவியொருவரின் சடலமொன்று புதன்கிழமை (11) மாலை மீட்கப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த சிவலிங்கம் புவிதா (20) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றில் வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு வந்தவர், பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்.உடுவில் - மானிப்பாய் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் புதன்கிழமை (11) மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த பாஸ்கரன் ஜெனித்தன் (30) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X