2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நீர்விநியோகக் காவலாளிகள் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஜூன் 12 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நிலாவரைக் கிணற்றுப் பகுதியில் நீர்விநியோகத்திற்கு காவலாளியாகக் கடமையாற்றுபவர் மீது இளைஞர்; குழு மேற்கொண்ட தாக்குதல் காரணமாக காவலாளி காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை (12) அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சின்னராசா கணேசராசா (30) என்பவரே காயமடைந்துள்ளார்.  இதனையடுத்து நீர் விநியோகத்தினையும் நிறுத்தி காவலாளிகள் போராட்டம் மேற்கொள்கின்றனர்.

இது பற்றித் தெரியவருவதாவது,
நிலாவரைக் கிணற்றிற்கு அண்மைய பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இன்று (12) இடம்பெற்ற தீர்த்த உற்சவத்திற்காக வந்திருந்த இளைஞர்கள் நிலாவரைக் கிணற்றடிக்கு வந்து நீராடியதுடன், அங்கு அட்டகாசத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, கிணற்றடியில் அட்டகாசம் செய்யவேண்டாம் என காவலாளி கூறவே, குறித்த இளைஞர்கள் குழு காவலாளியினை பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டதுடன், அவருடைய மோட்டார் சைக்கிளினையும் சேதப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மற்றய காவலாளிகள் அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அத்துடன், தமது சக காவலாளி மீது மேற்கொண்ட தாக்குதலினைக் கண்டித்து நீர் விநியோகத்தினையும் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அச்சுவேலி, புத்தூர், வாதாரவத்தை ஆகிய இடங்களிற்கான நீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X