2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விசேட அதிரடிப்படையும் இராணுவத்தின் ஒரு பிரிவு: சிவாஜி

Kanagaraj   / 2014 ஜூன் 13 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் பொலிஸாருடன் இணைந்து கடமையாற்றுவதற்கு தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் விசேட அதிரடிப் படையும், முப்படைகளில் இராணுவத்தின் ஒரு பிரிவே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் ஒற்றையாட்சியை ஏற்கமுடியாது. நாங்கள் சமஷ்டி முறையிலான தீர்வினைக் கேட்கின்றோம். அதனை அரசாங்கம் தரமறுத்தால் நாம் அடுத்த கட்டத்தினை நோக்கிச் செல்லவேண்டும்.

சுயாட்சித் தமிழீழமா? அல்லது சுதந்திர தமிழீழமா? என்பதையும் தமிழ் மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். இலங்கை மத்திய அரசாங்கம் போக்குவரத்து பொலிஸாரை ஏன் மாகாணத்திற்கு வழங்குவதற்கு ஓப்புக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

போக்குவரத்து பொலிஸ் வருமானம் அதிகமான பொலிஸ் பிரிவு. அவர்களின் வருமானம் சரியாக அரசாங்கத்திற்குச் செல்லவில்லையென்பதால் மாகாணத்திற்கு வழங்க முன்வந்துள்ளார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X