2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வடக்கில் ஆளணி பற்றாக்குறையினால் இராணுவ உதவி பெறப்படுகின்றது: பொலிஸ்

Menaka Mookandi   / 2014 ஜூன் 13 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரிலுள்ள ஆளணிப் பற்றாக்குறையினாலேயே இரவுநேர ரோந்து நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவியினை தாம் பெற்றுக்கொள்வதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ்., தலைமைப் பொலிஸ் நிலையத்தின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவையில் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன், யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு ஒரேயொரு விசேட அதிரடிப்படை முகாம் உள்ளமையினால் அங்கும் ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதனாலேயே இரவுநேர ரோந்து மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரையும் இணைத்துக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கு நாங்கள் ஆதரவு வழங்கவில்லை. நாட்டின் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பதற்கே ஆதரவு வழங்குகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் இராணுவத்துக்கு ஆட்சேர்க்க உதவுவதில் எவ்வித குற்றங்களும் இல்லை. நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆட்சேர்க்கவில்லை. இருந்தும், நாம் இதுவரையில் எவரையும் இராணுவத்திற்குச் சேர்த்துக்கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், இராணுவத்தில் இணைவதற்கு பொலிஸாரினால் வழங்கப்படும் நன்னடத்தைப் பத்திரமும் அவசியமானது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம் என அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X