2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு சிறுமிகள் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயம் கபிலன் 

யாழ். அச்சுவேலி அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை  ஐஸ்கிறீம் வானொன்றில் விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிறீமை வாங்கிவிட்டு, வீதியை கடக்க முற்பட்ட சிறுமிகள் இருவரை   மற்றுமொரு  வான் மோதியதால் காயமடைந்த இவ்விருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயதிலக பண்டா தெரிவித்தார்.

அச்சுவேலியைச்  சேர்ந்த குமார் ஷவீனா (வயது 13), டென்சில் பெந்தில்ராஜ் (வயது 14) ஆகியோரே காயமடைந்தனர்.

மேலும், இச்சிறுமிகளை மோதிய வான் அங்கு  இனிப்புப் பண்டங்கள் விற்கும் கடையையும்  மோதியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வான் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விரிவான   விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்  கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X