2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மிதிபலகையில் பயணிகளை ஏற்றிய பேருந்து சாரதிக்கு தண்டம்

Kanagaraj   / 2014 ஜூன் 13 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மிதிபலகையில் பயணிகளை ஏற்றிச் சென்ற கிளிநொச்சி தனியார் பேருந்து சாரதிக்கு 1500 ரூபா தண்டம் விதித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம், இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

ஆபத்தான முறையில் பயணிகளை மிதிபலகையில் ஏற்றியவாறு பேருந்தினைச் செலுத்திச் சென்ற  சாரதி, போக்குவரத்துக் கடமையிலீடுபட்ட கிளிநொச்சி பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து குறித்த சாரதிக்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று (13) வழக்குப் பதிவு செய்தபோதே, பதில் நீதவான் தண்டம் விதித்துத் தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .