2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 ஜூன் 20 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.தொண்டைமனாறு பகுதியினைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ஜெயசுந்தரம் (55) என்பவரைக் காணவில்லையென அவரது மனைவி வியாழக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.நகரிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (17) வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லையென மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .