2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஜுலை 22ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற இன்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டது.

காங்கேசன்துறை கடற்படையினரால் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட மேற்படி 18 மீனவர்களும், யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இந்தியாவின் தமிழகம், கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறையினர், மேற்படி மீனவர்களை 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய வேளையில், நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் திங்கட்கிழமை (04) (இன்று) வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து, மேற்படி 18 மீனவர்களின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் ஆர்.சபேசன் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .