2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கசிப்பு வைத்திருந்தவருக்கு தண்டம்

George   / 2014 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் 3 போத்தல் கசிப்பு வைத்திருந்த நபருக்கு 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் செவ்வாய்க்கிழமை (12) தீர்ப்பளித்தார்.

மேற்படி தண்டம் பணம் கட்டத் தவறும்பட்சத்தில் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதவான் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிப் பொலிஸாரிற்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்படி நபர் திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து மேற்படி நபர் இன்று செவ்வாய்க்கிழமை (12) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .