2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மல்லாகம் பகுதியில் புதன்கிழமை (13) துவிச்சக்கரவண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பளை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (14) தெரிவித்தனர்.

தெல்லிப்பளையைச் சேர்ந்த இராஜரத்தினம் (வயது 62) என்பவரே மேற்படி விபத்துக்குள்ளானவராவார்.

துவிச்சக்கரவண்டியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X