2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆவரங்கால் சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் சனிக்கிழமை (23) மாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவரங்காலைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சுதன் (வயது 20) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அதேயிடத்தைச் சேர்ந்த மகேந்திரன் லக்ஷன் (வயது 26) அச்சுவேலி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .