2025 ஜூலை 09, புதன்கிழமை

தரமற்ற குடிநீர் போத்தல்கள் விற்றவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ்., ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் தரமற்ற குடிநீர்ப் போத்தல்களை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகர சபை சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கடை செவ்வாய்கிழமை (26) சோதனை செய்யப்பட்டது.

இதன்போது, தரமற்ற குடிநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மேற்படி கடை உரிமையாளருக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது, நீதவான் மேற்படி உரிமையாளருக்கு தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .