2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸாரின் பெயரில் யாழில் நிதி மோசடி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார்.

'யாழ்ப்பாணம், கந்தர்மடப் பகுதியிலுள்ள வீடுகளில் வான் ஒன்றில் வந்த சிலர், தாம் யாழ்ப்பாணப் பொலிஸார் என தெரிவித்து, கொழும்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி பணம் வசூலித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியாது' என அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண பொலிஸார் அவ்வாறு எந்தச் சிறுவர் இல்லங்களையும் நடத்தவும் இல்லை அத்துடன், அவ்வாறு பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபடவும் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு செயற்படுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டினால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .