2025 ஜூலை 09, புதன்கிழமை

வீதி ஒழுங்கை மீறியவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பகுதிகளில் வீதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்கள் ஓட்டிச் சென்ற ஐவருக்கு 8 ஆயிரம் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

வரி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய மூவருக்குத் தலா 1,500 ரூபா வீதமும், அபாயகரமான முறையில் வாகனமொன்றை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு 1,500 ரூபாவும், நிறுத்தத்தடை என்ற இடத்தில் வானை நிறுத்திய வான் சாரதிக்கு 2,000 ரூபாவும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.

மேற்படி நபர்கள் இந்த வாரத்தின் பல்வேறு திகதிகளில் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து நீதவான் அபராதங்கள் விதித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .