2025 ஜூலை 09, புதன்கிழமை

கடை உடைத்து பொருட்கள் திருட்டு

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். ஆவரங்கால் சந்தியிலுள்ள கடையொன்றில் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (31) அதிகாலை திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் பிற்புற ஜன்னல் ஊடாக உள்நுழைந்து அங்கிருந்த பால்மா, அரிசி, சவர்க்கார வகை, பனடோல், கற்பூரம், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

அத்துடன், உண்டியலில் சேகரிக்கப்பட்ட பணமும் உண்டியலுடன் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கடை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .