2025 ஜூலை 09, புதன்கிழமை

பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய மூவர் கைது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றின் முன்பாக நின்று பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டில் மூவர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்யப்பட்டதாக  ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபானசாலையின் முன்பாக நின்று மேற்படி மூவரும் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு சண்டையிட்டுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற பொலிஸாரை தகாத வார்ததைகளால்; மேற்படி நபர்கள் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மூவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .