2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் படுகாயம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.பொலிகண்டி ஆலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 40 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் திங்கட்கிழமை (01) தெரிவித்தனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்;த பொன்னராசன் குணசீலன் (வயது 40) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்தபோது கன்டர் ரக வாகனமொன்று இவரை மோதியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கன்டர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .