2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அறிவுறுத்தலை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம்

Gavitha   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பாதசாரிகள் கடவையில் நிற்காமல் சென்றதுடன், பொலிஸாரின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் ஒட்டுநருக்கு 3000 ரூபா அபராதமும், 1 மாத காலத்துக்க சாரதி அனுமதிப்பத்திரத்தை தடை செய்தும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் வெள்ளிக்கிழமை (05) உத்தரவிட்டார்.

மேற்படி நபர், கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸாரால் புதன்கிழமை (03) கைது செய்யப்பட்டார்.

அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனம் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

மேற்படி நபரை புதன்கிழமை (03) கிளிநொச்சிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .