2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 12 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

விசா முடிந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜையை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்.  நீதவான் பொ.சிவகுமார் உத்தரவிட்டார்.

இந்தியா ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த எஸ்.சுந்தரபாண்டியன் (வயது 36) என்ற இந்திய பிரஜை புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டார். இந்த இந்திய பிரஜை யாழ்.நகரத்திலுள்ள விருந்தினர் விடுதியில் பணியாற்றுவதற்கான 2 வருட வேலை விசாவில் இலங்கை வந்திருந்தார்.

விசா காலத்தின் இடையில் இந்திய பிரஜை, விருந்தினர் விடுதியின் பணியிலிருந்து, விருந்தினர் விடுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமல் வெளியேறி சென்றிருந்தார்.

இதனையடுத்து, இந்திய பிரஜையின் கடவுச்சீட்டு, விசா ஆகியவற்றை விருந்தினர் விடுதி உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்திய பிரஜை தனது கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பெறும் நோக்குடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு புதன்கிழமை (10) வந்திருந்தார்.

இதன்போது, இந்திய பிரஜையுடைய விசா காலம் முடிவுற்று 2 மாதங்கள் ஆன நிலையிலும் இலங்கையில் இவர் தங்கியிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து, இந்திய பிரஜை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறினார்கள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .