2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இனிப்பு கொடுத்து, எட்டு வயது பேத்தியை துஷ்பிரயோகம் செய்த தாத்தா கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா, பொ.சோபிகா

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் 8 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை (தாயின் தந்தை) ஞாயிற்றுக்கிழமை (14) காலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுமியை அவளது தாத்தா, தொடர்ந்து 9 நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

இனிப்பு பண்டங்களை வாங்கிக்கொடுத்து, அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர், இவ்விடயத்தை வெளியில் சொல்லவேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது மகளில் மாற்றங்கள் இருப்பதை கண்டுகொண்ட தாய், மகளிடம் கேட்டபோது, தாத்தா தனக்கு செய்தவற்றை அச்சிறுமி கூறியுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை சனிக்கிழமை (13), யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் சிறுமியை வைத்திய பரிசோதனை மேற்கொண்ட போது, சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (14) காலை, தாத்தா கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து சிறுவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0

  • bhuvaneswari. d Monday, 15 September 2014 10:09 AM

    Avanai ellam konnudunga. Bt oru nallil saga kudathu. uyir irukanum anal avan uyir pogra vara thinam thinam saganum. Apdi oru punishment.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .