2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழில் புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்தால்  யாழ்;.புகையிரத நிலையத்தில் 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள ஸ்ரான்லி வீதி, தெற்கு பக்கமாகவுள்ள யாழ்.புகையிரத நிலைய வீதி, கிழக்குபக்கமாகவுள்ள இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கமாகவுள்ள வைத்திலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளது.

இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி  செயற்திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான தொடர்பாடல் வசதிகள், ரயில் பணியாளர்களுக்கான விடுதிகள், பேருந்து, வாகன தரிப்பிடங்கள், நவீன வசதிகளுடனான விடுதிகள் போன்றவையும் அமைக்கப்படவிருக்கின்றன. 

மேற்படி நகர அபிவிருத்திக்கான நிதி எவ்வளவு என்பது தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானிக்கவில்லையெனவும், ஆலோசனைகள் பெறும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றதும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்' எனவும் தெரிவித்தார்.

மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் பொருட்டு, புல்லுக்குளத்துக்கும் யாழ்.பொலிஸ் நிலையததுக்கும்  இடையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் 6 மில்லியன் ரூபா நிதியுதவியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை வீடு ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .