2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.தேவியை பார்க்க சென்ற சிறுமியை பாம்பு தீண்டியது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.தேவி புகையிரதத்தை பார்ப்பதற்காக வயல் வரம்பின் வழியே ஓடிச்சென்ற சிறுமியை பாம்பு தீண்டியதில் சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுணாவில் மேற்கை சேர்ந்த மகிந்தன் பதுமிகா (வயது 07) என்ற சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர்களுடன் வயலில் நின்றிருந்த சிறுமி யாழ்.தேவி புகையிரதம் வெள்ளோட்டமாக யாழ்ப்பாணம் செல்கின்றமையை வேடிக்கை பார்ப்பதற்காக வயல் வரம்பு வழியாக புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் செல்ல முற்பட்டார்.

இதன்போது, வயல் வரம்பில் கிடந்த புடையன் பாம்பு சிறுமியை தீண்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .