2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணொருவரை செவ்வாய்க்கிழமை (23) கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபரான பெண் உற்பத்தி செய்து வைத்திருந்த கசிப்பு மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .