2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மின்சாரத்தை திருடிய மூவர் கைது

George   / 2014 நவம்பர் 09 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். நாவற்குழி ஐயனார் கோவில் வீதியில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற பெண் உட்பட 3 சந்தேகநபர்கள், சனிக்கிழமை (08) இரவு கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார சபையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளிலே மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், அவர்கள் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதற்கு பயன்படுத்தி வயர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சந்தேகநபர்களை ஞாயிற்றுக்கிழமை (09) சாவகச்சேரி நீதவான் முன்னிலை ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .