2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் வடக்கில் கொங்கிறீட் வேலிகள்: மக்கள் அச்சம்

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளை விட, ஏனைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி மரக்கட்டை, முட்கம்பி வேலிகளை அமைத்திருந்தனர்.

தற்போது அவ்வேலிகள் அகற்றப்பட்டு அவ்விடத்தில் கொங்கிறீட் தூண்கள் நாட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்படுவதால் இது நிரந்தர வேலிகளா என்றும் மீதமுள்ள தமது காணிகள் விடுவிக்கப்படாத நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கடந்த 11ஆம் திகதி, வலிகாமம் வடக்கு பகுதியில் 9 கிராமஅலுவலர் பிரிவுகளில் பகுதி பகுதிகளாக மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதன்போது அனுமதிக்கப்படாத பகுதிகள், மரக்கட்டை வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தன.

தற்போது மக்கள், விடுவிக்கபட்ட தமது நிலங்களை துப்பரவு செய்ய சென்ற போது, மரக்கட்டை வேலிகள் அனைத்தும் கொங்கிறீட் வேலிகளாக மாற்றப்பட்டடுவருகின்றன.

மரக்கட்டை வேலிகளை பார்த்து மீதமுள்ள எமது நிலங்களும் விடுவிக்கப்படும் என்று நம்பினோம். கொங்கிறீட் தூண் வேலிகள் அமைப்பட்டு வருவதால் மிகுதி  காணிகள் இனிமேல் விடுவிக்கப்படாத நிலை ஏற்படுமோ என்று அச்சமடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .