2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சண்டிலிப்பாயில் கலாசார மத்திய நிலையம்

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

சண்டிலிப்பாய் பிரதேசத்தின் கலை, கலாசாரத்தை வளர்க்கும் நோக்கில் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதிக்குள் கலாசார மையம் ஒன்று அமைக்கவுள்ளதாக பிரதேச செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில்,

வடலியடைப்பு ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் இதற்கான காணியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளனர். அதற்கான சட்ட ரீதியான அனுமதியும் எமக்குக் கிடைத்துள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டு, மத்திய நிலையம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும்.

இந்த வருட இறுதிக்குள் கட்டடப் பணிகள் முடிவடைந்து, கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .