2025 ஜூலை 09, புதன்கிழமை

வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை

George   / 2015 மே 04 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சூரியவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (04) காலை   2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக, உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

வீட்டிலுள்ளவர்கள் யாழ். நகருக்குச் சென்றிருந்த நேரம், வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி, 2 பவுண் காப்பு, ¾ பவுண் மோதிரம் என்பன திருடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .