2025 ஜூலை 09, புதன்கிழமை

திருமணத்துக்கு சென்றவர்கள் வீட்டில் திருட்டு

George   / 2015 மே 05 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் துன்னாலை தக்குச்சம்பாட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் திங்கட்கிழமை (04) பின்பக்க கதவை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியன திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) கூறினர்.

வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி, நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம் ஆகியன இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்துக்குச் சென்றிருந்த போது இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .