2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பொலிஸாரை தாக்கிய 17 பேர் விளக்கமறியலில்

Gavitha   / 2015 ஜூன் 21 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவரைப் பிடிக்கச் சென்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 பெண்கள், கசிப்பு காய்ச்சியவர் உள்ளிட்ட 17 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் செல்லையா கணபதிப்பிள்ளை சனிக்கிழமை (20) உத்தரவிட்டார்.

மேற்படி பகுதியில் கசிப்பு காய்ச்சிய சந்தேகநபர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு பொலிஸார் கைது செய்தனர். இதன்போது, ஒன்றுகூடிய சிலர் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு சனிக்கிழமை (20) சென்ற பொலிஸார், பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் 12 பெண்கள் 5 ஆண்கள் (கசிப்பு காய்ச்சியவரும் சேர்த்து) மொத்தம் 17 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .