2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அலைபேசியில் ஆபாசப் படம் பார்த்தவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

யாழ்ப்பாணம், நெல்லியடி பஸ் நிலையத்தில் அலைபேசியில் ஆபாசப் படத்தை வைத்திருந்து அதனைப் பார்வையிட்டவருக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்த பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா, அந்நபரை கடுமையாக எச்சரித்தார்.

பஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (22) மாலை அலைபேசியுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியவரை அவதானித்த கடமையிலிருந்த பொலிஸார் அந்நபரை சோதனையிட்ட போது, அவருடைய அலைபேசியில் ஆபாசப் படங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடிச் சேர்ந்த அந்நபரைக் கைது செய்த நெல்லியடி பொலிஸார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அபராதம் விதித்த நீதவான், அவரது அலைபேசியின் தகவல் சேமிக்கும் அட்டையை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .