2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆலயங்களில் இசைக் கச்சேரிக்கு தடை

Menaka Mookandi   / 2015 ஜூன் 25 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் இரவு வேளைகளில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா இன்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார்.

ஆலயங்கள் அமைதியின் உறைவிடம் அங்கு அமைதியைக் குழப்பும் வகையில் கேளிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது.

அத்துடன், இசைக்கச்சேரிகளின் போது கைகலப்புக்கள் ஏற்பட்டு குழப்பங்களும் இடம்பெறுகின்றன. இது ஆலயங்களுக்கு பொருத்தப்பாடில்லாத செயற்பாடு.

இதனைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு தடை விதிப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .