Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தது.
வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
சம்பூர் காணிகள் விடுவிப்பதற்கு எடுத்த நடவடிக்கையில் வெற்றியைக் கண்டுள்ளோம். தொடர்ந்தும் மக்களின் காணிகள் விடுவிப்புக்காக பாடுபடுவோம்.
இம்முறை அதிகளவான ஆசனங்களுடன் நாடாளுமன்றம் செல்வோம் என்ற நம்பிக்கையுள்ளதாக அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
4 hours ago