Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
George / 2015 ஜூலை 11 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள இறைச்சிக்கடைகள் மீது திடீர் சோதனை நடவடிக்கையை யாழ். பொலிஸார், சனிக்கிழமை (11) மேற்கொண்டுள்ளனர்.
யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகள் அனைத்தையும் சனிக்கிழமை (11) காலை யாழ். பொலிஸார் சுற்றி வளைத்து சோதனைகளை மேற்கொண்டனர்.
அதன் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிபத்திரம் இல்லாது மாடுகளை வெட்ட முற்பட்ட மூன்று சந்தேகநபர்களை கைது செய்தனர்.
அத்துடன் வெட்டுவதற்கு தயாராக இருந்த நான்கு மாடுகள் மற்றும் 104 கிலோகிராம் மாட்டிறைச்சி என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் சோதனை நடவடிக்கையினை யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கிஸ்லி ஜெகத் ஜெயலத், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago