2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கசிப்பு காய்ச்சிய இருவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 13 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் கசிப்பு காய்ச்சிய இருவரை ஞாயிற்றுக்கிழமை (12) இரவு கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த மேலும் இருவர் தப்பித்து ஓடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள், இரண்டு பரல் கசிப்பு மற்றும் ஒரு தொகுதி கசிப்பு என்பன அங்கிருந்து மீட்கப்பட்டன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்தைச் சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .