2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் இரு கட்சிகள், ஆறு சுயேட்சைக் குழுக்கள் அவுட்

Gavitha   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சொர்ணகுமார் சொரூபன்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த இரண்டு கட்சிகள் மற்றும் 6 சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான வேதநாயகம் நாகலிங்கன் திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கட்கிழமை (13) மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்த கட்சி மற்றும் சுயேட்சைக்குழுக்கள் தொடர்பிலான ஆட்சேபனை தெரிவிப்பு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே தெரிவத்தாட்சி அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி 8ஆவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்கு 17 கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன. அவை தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு ஒத்துப்போகும் நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்மூலம் 15 கட்சிகளினுடையதும் 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எங்கள் இலங்கை சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளினதும் 6 சுயேட்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன' என்று அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .